Saturday, 7 July 2012

தொடரும்...


நீ என்னை விட்டு செல்லும் போதும்
என்னை மட்டுமே வைத்திருந்தாய் மனதில்..
ஆனால் அன்று பெரிதாக தெரியவில்லை 
நீ கூறிய வார்த்தைகள்
உன்னை நான் பார்ப்பது 
கல்லறையில் என்று ஒரு நாளும் 
நினைத்தது இல்லை....

Tuesday, 19 June 2012

ஏமாற்றம்



உன் தொலைபேசி
அழைப்புக்காக
காத்திருக்கும் எனக்கு
ஏமாற்றங்களே கிடைக்கின்றன.

Saturday, 16 June 2012

என்னுள்ளே



என்னுள் ஏற்பட்ட மாற்றத்துக்கு
காரணமானவன் நீ பிறகு
ஏன் என்னை விட்டு நீங்கிச் சென்றாய்
என்னை எப்போதும்
சந்தோசமாக இருக்க வேண்டும்
என்று சொன்னவனே நீதான்
உன்னாலே வேதனை ஏற்பட்ட பின்பு
எப்படி சந்தோசமாக இருப்பேன்
என்னுள் ஏற்பட்ட சந்தோசம் சோகம்
எல்லாமே நீதான்

Thursday, 14 June 2012

கனவு


உன்னைப் பார்த்த
சந்தோசத்தில்
தவறிவிழுந்தேன்
உறக்கத்தில் இருந்து
எழுந்தவுடன் தான்
புரிந்தது உன்னைக்
கண்டது கனவில் என்று
எப்போதும்; உனைத்தான்
நேரில் கண்டதே இல்லையே
அதிசயம் நடந்துவிட்டதோ
என்று எண்ணி விட்டேன்
சிறிது நேரம்........

Wednesday, 13 June 2012

தடுமாற்றம்





எப்பொழுதும்
உன்னுடன் ஓயாமல்
பேசிய எனக்கு
இன்று பேச
வார்த்தைகள் இன்றி
தடுமாறுகின்றேன்......


 

தப்பு




உன் இறுதி ஊர்வலத்துக்கு
என்னை அனுமதிக்கவில்லை
உன் முகத்தை பார்க்கத்துடித்த
என் இதயத்தின் உணர்வை
புரிந்து கொள்ளவும் இல்லை
நான் அப்படி என்ன தப்பு செய்தேன்
உன்னை மாற்றாளுக்கு கொடுத்ததற்கா?

வலி




உன்னோடு பேசினால்
அழுதுவிடுவேனோ
என்ற பயம்
எனக்கு இருக்கின்றது
ஏனென்றால்
என் இதயத்தைப்போல
கண்களும் வலிகளை தாங்காது......